CONTACT US FOR ALL YOUR INSURANCE NEEDS

Html forms generator powered by 123ContactForm.com | Report abuse

Showing posts with label insurance agent Coimbatore. Show all posts
Showing posts with label insurance agent Coimbatore. Show all posts

Friday, July 11, 2014

மக்களின் இப்போதைய தேவை மருத்துவக் காப்பீடு

. மருத்துவ செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால் தான் மக்களும் எதாவது ஓர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தயாராகி வருகின்றனர் . தற்போதைய தொலைக்காட்சி விளம்பரங்களும் மருத்துவ காப்பீட்டின் அவசியத்தினை மக்களிடம் அதிகமாய் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியுள்ளன.
இப்போது மார்ச் மாதம் நெருங்குகிறது! வருமான வரி செலுத்துபவர்கள், தங்கள் வரிவிலக்கிற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய காத்திருக்கும் தருணம் இது.  இத்தருணத்தை எதிர்நோக்கி காப்பீடு செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ‘ கொக்கு மீனுக்காக’ காத்திருப்பதை போல் தயாராக உள்ளனர். நமக்கும்  எதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்து காப்பீட்டு பத்திரம் வாங்கி அலுவலகத்தில் சமர்பித்தால் போதும்! அது தான்  இப்போதைய தேவை. அதைவிட்டு சேரும் திட்டம் நல்லதா அதனால் என்ன பயன் என்று ஆராய நேரமில்லை.
நமது ஏஜெண்டும், பல்வேறு கதைகளை கூறி நம்மிடம் பாலிசி பெறுவதிலேயே குறியாய் இருப்பார்.  “நான் பார்த்துகிறேன் சார், நாங்க எத்தனை பேருக்கு  பாலிசி எடுத்து கொடுத்து காப்பீடு செய்து உதவியிருக்கோம்” என்று  உங்கள் எதிர்காலமே அவர்கள் கையில் தான் என்ற வகையில் உங்களை ஏதோவொரு திட்டத்தில் சேர்த்து விட்டுவிடுவர். நாமும் அதோடு அதனை மறந்து விடுவோம்.
ஆனால், நமக்கு எதாவது உடல் கோளாறு ஏற்ப்பட்டு மருத்துவமனைக்கு போனால் தான், அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் தெரிய வரும். ”உங்களுக்கு ஏற்கனவே இந்த வியாதி இருந்திருக்கிறது, பாலிசி போடுவதற்கு முன்னமே ஏன் தெரிய படுத்தவில்லை, உங்களுக்கு இதில் மருத்துவ காப்பீடு அளிக்க இயலாது, உடனே பணத்தை காட்டுங்கள்” என்று எல்லாம் கூறி நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடும் போதுதான், பாலிசியின் உண்மை சொருபம் தெரிய வரும்.
இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க நாம் பாலிசி போடுவதற்கு முன் அதைப் பற்றி நன்கு அறிந்து இருக்க வேண்டும், நம் ஏஜென்டிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, நமக்கு எதாவது வியாதி இருக்கின்றதா, இல்லையா என முன் கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து அதனை நம் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம், எதற்கு தேவை இல்லாமல் மருத்துவ பரிசோதனை, நமக்கு வியாதி எதாவது இருக்கவா போகிறது, வயது நாற்பது தானே ஆகிறது என நினைத்து விட்டு விட்டால் சங்கடம் நமக்கு தான்.
இப்படிச் செய்வதால், பாலிசியின் கட்டணம் கூடலாம், அதை நம் சரியாக கணித்திருக்க வேண்டும். பொதுவாக மருத்துவ காப்பீட்டு பலன்கள் நிராகரிக்கப்படுவதற்கு  முக்கிய காரணங்களில் ஒன்று , நாம் முன் கூட்டியே நமது உடல் கோளாறு பற்றிய உண்மைகளை மறைத்திருப்பது, அல்லது கூறாமலிருப்பது தான். இந்த அடிப்படியிலேதான் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள்  அதன் பலனை நிராகரிக்கின்றன .  முடிந்தவரை நமது உண்மை நிலையை முன் கூட்டியே தெரிவித்து இருப்பது நல்லது.
ஏஜென்ட் தட்டிக்கழித்தாலும் நாற்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து அதன் விவரங்களை தெரிவித்து இருப்பது நலம். உதாரணமாக, நமக்கு சக்கரை வியாதி சம்பந்தமான அறிகுறி மருத்துவ பரிசோதனையில் இல்லை என வைத்து கொள்ளலாம். இதன் மருத்துவ சான்றிதழை ஏற்கனவே கொடுத்திருந்தால், பிறகு நமக்கு சக்கரை வியாதி வந்து அதற்க்கான மருத்துவம் பார்க்கும் போது உங்கள் மருத்துவ காப்பீட்டில் சந்தேகம் எழவே வாய்ப்பில்லை, ஏனென்றால் நீங்கள் ஏற்கனேவே உங்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என முன்கூட்டியே ஆதாரத்தோடு கொடுத்திருக்கின்றீர்கள் . ஆனால்,  இதனை நீங்கள் கொடுக்காத பட்சத்தில், உங்கள் பெற்றோருக்கு சக்கரை வியாதி இருந்திருந்தால் மருத்துவக் குழு, உங்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்கனவே இருந்திருக்கின்றது, ஆனால் நீங்கள் அதனை மறைத்து காப்பீடு செய்துள்ளீர்கள் என உங்களுக்கு எதிராக நிருபிக்க வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, மருத்துவ சோதனை முன்கூட்டியே செய்து விண்ணப்பிப்பது மிகவும் முக்கியம்.
சில நிறுவனங்கள் காப்பீடு செய்தவர்களின் நண்பர்கள், சொந்தங்கள், மற்றும் அக்கம் பக்கத்தாருடன் நண்பர்கள் போல் பேசி, உங்களுக்கு ஏதேனுமொரு பிரச்சனை முன் கூட்டியே இருக்கின்றதா என்று விவரங்கள் சேகரிக்க ஆட்களை அனுப்புகின்றதாக தகவல். இந்த மாதிரி நேரங்களில் உங்களின் மருத்துவ சான்றிதழ் தான் கை கொடுக்கும். ஏனென்றால், இந்த மருத்துவ பரிசோதனை செய்பவர்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தான். ஆகவே, உங்கள் வாதம் தான் வெற்றி பெரும்.
மருத்துவ பரிசோதனை செய்ய கடமைப்பட்டவர்கள் யார் யார் என்றால்,
18 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்த பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
 31 முதல் 40 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
 41 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் மற்றும் விரிவான பரிசோதனைகள் விவரம் தேவைப்படும்
மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் ஒரு வாரத்திற்கு முன் நம்மை நாமே தயார் செய்து கொள்ளவேண்டும்.   நாம் உட்கொள்ளும் உப்பு , இனிப்பு போன்றவற்றின் அளவை எப்போதையும்விட குறைத்தே எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு சம்பந்தமான உணவு பதார்த்தங்களை தவிர்த்து கொள்ளுதல் நலம் . புகையிலை போன்ற லாகிரி வஸ்துகளை அறவே தொடக்கூடாது. நன்றாக உறங்கி நம் இரத்த அழுத்தத்தை சீராக்கி கொள்ளவேண்டும்.  அதிகமான உடற்பயிற்சி, நடை பயிற்சி வேண்டாம். இதனால் நம் உடல் உறுப்புகளின் செயல் பாடு சீராக இருக்க உதவும். இப்போது செய்யப்படும் மருத்துவ சோதனையானது நம் உடலின் உண்மையான செயல் பாட்டை தெரியப்படுத்தும், மேலும் நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அறிந்து கொள்ளலாம்.
மருத்துவ காப்பீட்டிற்காக நாம் செய்து கொள்ளும் இந்த மருத்துவ பரிசோதனையானது நமக்கு நன்மை தான் பயக்கும்!
Translate
1

மருத்துவ காப்பீடு Health Insurance why more important ?

மருத்துவ காப்பீடு Health Insurance


                                                                           

நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது மெடிக்கல் இன்சூரன்ஸ்(மருத்துவ காப்பீடுப்ரீமியம் கட்டுவதை ஒரு வீண் செலவாகவே கருதிக் கொண்டிருக்கிறோம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம்?  இன்று மருத்துவமனைகள் அனைத்துமே நம் பயத்தை பயன்படுத்தி பணம்பிடுங்கும் பகல் கொள்ளை காடுகளாக மாறிவிட்ட போதுநாமும் அதற்கேற்பநம்மை உஷாராக வைத்துக்கொள்ள வேண்டாமா?

இன்றைய வேகமான உலகில் பணம் ஈட்டும் அவசரத்தில்ஓடிக்கொண்டிருக்கும் நாம் நம் ஆரோக்கியம் பற்றி எந்த அளவு அக்கரைகொண்டுள்ளோம் என்பது அவரவர்க்கு நன்கு தெரியும்இதுபோதாதென்று வாகன நெருக்கடி நெரிசலால் மாசுபட்ட காற்றுசுத்தமில்லாதகுடிநீர்உணவுப் பொருட்களில் கலப்படம், உடல் உழைப்பற்ற வேலை,ஆரோக்யமற்ற பணி சூழல் அதனால் விளையும் மன அழுத்தம்(ஸ்ட்ரெஸ்), துரித உணவுகள் எல்லாம் நம் ஆரோக்யத்துடன் விளையாடிவருகின்றன.

தனிப்பட்ட நபர்கள்நன்றாக தானே இருக்கிறோம் தங்களுக்கு எதற்குகாப்பீடு திட்டம். நமக்கு இது தேவையில்லை என்று நினைத்துக்கொள்வார்கள்எனினும்காப்பீடுக்கான தேவை உங்களுக்கு இருக்கிறதுஎன்பதற்கு பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளனஉங்களுக்கு நல்லவருமான ஆதாரம் இருந்தாலும்வாழ்க்கையில் சில எதிர்பாராத இழப்புகள்ஏற்படும்இந்த எதிர்ப்பார்க்காத நிகழ்வுகளுக்கு எதிராக காப்பீடு நிறுவனங்கள்உங்களை தயார்படுத்தி இழப்புகளை ஈடு செய்ய முன் வருகின்றன.

ப்ரீமியம் நிச்சயம் ஒரு அதிகப்படியான செலவுதான் என்றாலும் அது நம்மைபெரிய இழப்புக்களிலிருந்து காக்கும்நமக்கு எப்போது பெரிய நோய்கள்,மருத்துவ செலவு நேரிடும் என்று தெரியாத நிலையில்,  அப்படி வரும் பட்சத்தில் குறைந்தது 80 சதவீதம் வரை மருத்துவச் செலவை கட்டிவிடும்,காப்பீடு,

இதனால் மருத்துவச் செலவால்உங்கள் சேமிப்பு கரைவதை தவிர்ப்பதுமட்டுமல்லாமல்நீங்கள் கடனாளி ஆவதையும் தவிர்க்கலாம்உங்கள்மருத்துவச் செலவு அனைத்தையும் நீங்களே ஏற்றுக் கொள்வதை விட,இதற்கான ப்ரீமியம் தொகை மிகக் குறைவானதுதான். ஒரு நாள் தேநீர் செலவை விட குறைவு தான்.

வருடம் ஒரு முறை பணம் கட்ட வேண்டும்..கட்டிய பணம் திரும்பகிடைக்காது.

மருத்துவ காப்பீடு என்பது உங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமான உங்கள் மருத்துவ செலவை பார்த்து கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம்.

                                                               

சில மேலை நாடுகளில் மருத்துவ காப்பீடு கட்டாயம் என்கிற நிலை உள்ளதுஇந்தியாவில் அவ்வாறு ஏதுமில்லைகாப்பீடு இல்லாமல் இருபது ,முப்பதாயிரம் பெருமானமுள்ள இரு சக்கர வாகனங்களையோ சிலலட்சங்கள் பெருமானமுள்ள நான்கு சக்கர வாகனங்களையோ ஓட்டமுடியாது ஆனால் விலைமதிப்பற்ற மனிதன் உயிருக்கோ,மருத்துவத்திற்கோ காப்பீடு இல்லாமல் இருக்க முடியும் என்பது வேதனை.

தமிழகத்தில் அரசு காப்பீடு திட்டம் உள்ளது அது குடும்ப வருவாய் மாதம்ரூ6000/- க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமேவருட குடும்ப வருமானம்ரூ72,000/- க்குள் இருப்பவர்கள்இதில் சேர்ந்து முன் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுங்கள்.

மற்றவர்கள் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ள பல பொது நிறுவனங்களும்பலதனியார் நிறுவனங்களும் உள்ளன அதில் சேர்ந்து கொள்ளுங்கள்அதிலும்முக்கியமாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் உடனே சேர்ந்துகொள்ளுங்கள்மருத்துவ காப்பீடு என்பது எல்லா வயதினரும் சேர முடியும்[3 மாத குழந்தை முதல் 99 வயது வரை]

காப்பீடு கட்டணம்  3 லட்சத்திற்கு  40 வயதுள்ள கணவன், மனைவிக்கு மட்டும்
 என்றால் ஒரு வருடத்திற்கு கட்டணம் ரூ 5000/- திலிருந்து ரூ7000/- வரை இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு [25 வயதுக்குள்] சேர்த்து என்றால் நான்கு பேருக்கும் சேர்த்து ரூ7000/- திலிருந்து ரூ 9000/- வரை இருக்கிறது.

அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஏறக்குறை சிற்சில மாற்றத்துடன் ஓரளவுக்கு ஒரே மாதிரியான சட்டதிட்டத்துடன் தான் இருக்கின்றன.பிரீமியம் கட்டிய இரண்டு வருடங்களுக்குள் வரும் சில நோய்களுக்குமருத்துவ செலவு தரமாட்டார்கள்நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது.

சொந்த ஊரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கும் மற்றும் அனைத்து ஊரிலும் உள்ள முக்கிய பெரிய மருத்துவமனைகளுக்கும் அந்தநிறுவனத்துடன் ஒப்பந்தம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் அப்படி இருந்தால்தான் பணம் எதுவும் கட்டாமல் [cashless] மருத்துவம் பார்க்க முடியும். 

2. மருத்துவ செலவில் ரூம் வாடகை சேர்த்து கிடைக்குமா என்பதையும். நாள் ஒன்றுக்கு ரூ 1000/- முதல் ரூ 5000/- வரை கிடைக்குமா என்பதையும் பார்த்துகொள்ள வேண்டும்.

3. சில நோய்களுக்கு செலவை உடனே தர மாட்டார்கள். அதற்கான காத்திருப்பு காலம் குறைவாக உள்ளதா என்பதை கவனிக்கவும்.

4. கூடுதலாக ஆம்புலன்ஸ் கட்டணம் தரப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.

5. மருத்துமனைகளில் சேர்வதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் செலவுகளை தருகிறதா என்பதையும் கவனிக்கவும்.

6. கிளைம் செய்யாத வருடத்திற்கு போனஸ் அல்லது ஹெல்த் செக்கப் கிடைகிறதா என்பதையும் பார்க்கவும்.